இதில் யாருக்கு தண்டனை..? ஆசிட் வீசிய காதலனை 13 வருடம் கழித்து கைகோர்த்த காதலி...

துருக்கியில் தன் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலனையே இளம்பெண் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் யாருக்கு தண்டனை..? ஆசிட் வீசிய காதலனை 13 வருடம் கழித்து கைகோர்த்த காதலி...

துருக்கி நாட்டின் ஹடாய் மாகாணம் இஸ்ஹெண்டிரூன் மாவட்டத்தை சேர்ந்த ஹசிம் ஒசன் செடிக் அதே பகுதியை சேர்ந்த  பெர்பின் ஒசிக்  இருவரும்  காதலித்து வந்துள்ளனர். 

இதனையடுத்து, காதலர்கள் இருவருக்கும் இடையே கடந்த 2019 ஆம் ஆண்டு மனகசப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சண்டை முற்றவே, இருவரும் பிரிந்தனர். 

ஆனால், தன்னை விட்டு பிரிந்த பெர்பின் மீது ஆத்திரமடைந்த ஹசிம் ’எனக்கு நீ கிடைக்கவில்லை என்றால் யாருக்கும் கிடைக்கக்கூடாது’ என கூறி தனது காதலி  மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் பெர்பினின் முகம் மற்றும் உடலின் பெரும்பகுதிகள் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானது. 

இதனை தொடர்ந்து ஹசிம் ஒசன் செடிக் கைது செய்யப்பட்டு அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  சிறையில் அடைக்கப்பட்ட பின்னர்,  மனம் திருந்திய ஹசிம் ஆசிட் வீசிய தனது முன்னாள் காதலியான பெர்பின்சிடம் தன்னை மன்னித்துவிடும்படி கடிதம் எழுதியுள்ளார். 

தம் காதலனிடமிருந்து வந்த மன்னிப்பு கடிதத்தை ஏற்ற பெர்பின் அதன் பின்னர் சிறையில் உள்ள தனது முன்னாள் காதலன் ஹசிமிற்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்ந்த நிலையில், நாளடைவில் இருவருக்கும் இடையே மீண்டும் காதல் வளர வழிவகுத்துள்ளது.

இந்நிலையில், ஹசிம் தனது  தண்டனைக்காலம் முடிவடைந்ததையடுத்து திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். ஆனால், கொரோனா பரவல் காரணமாக திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த  ஹசிம் ஜாமினில் வெளியே வந்தார்.

இந்நிலையில், சிறையில் இருந்து வெளியேவந்த தனது முன்னாள் காதலன் ஹசிமை திருமணம் செய்ய பெர்பின் ஒசிக் சம்மதம் தெரிவித்தார். 

இதனைத்தொடர்ந்து, தன் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலன் ஹசிமை பெர்பின் ஒசிக் திருமணம் செய்துகொண்டு, தற்போது தம்பதியராக  இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.