சர்ச்சைக்கு லீவு விட்டிருந்த வாசன், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்!

சர்ச்சைக்கு லீவு விட்டிருந்த வாசன், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்!

சென்னை, அமைந்தகரை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார், காரில் வந்த வாசன்.

2கே கிட்ஸின் ஹீரோ பைக் ரைடர் ஆக வளம் வரும், டிடிஎப் வாசன் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். விலை உயர்ந்த பைக்குகளில் பல இடங்களுக்கு சென்று, அதனை வீடியோவாக பதிவு செய்து, யூடிபில் பதிவிட்டு பல லட்சம் ரசிகர்களை பெற்றர்,  டிடிஎப் வாசன்.

அதே போல், சாலைகளில் சட்டத்துக்கு முரணாக செயல்படுவது, பைக்கில் அதிவேகமாக பயன்படுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, பல வழக்குகளையும் வாங்கிக் குவித்துள்ளார். இந்நிலையில், தற்போது நடிகராகவும், சினிமாவில் அறிமுகமாகிறார். அண்மையில் இது குறித்த அறிவிப்பை, மஞ்சள் வீரன் என போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

அந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பையும் பெற்று வருகிறது. படப்பிடிப்பு பணிகளில் மூழ்கியிருப்பதால், சென்னையில் முகாமிட்டிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், இன்று, சென்னை அமைந்தகரை அருகே காரில் சென்று கொண்டிருந்தபொழுது, இரு சக்கர வாகனம் ஒன்றின் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில், இரு சக்கர வாகனத்தில், சென்ற நபர்  காயமடைந்ததாக தெரிகிறது. வாசன் சென்ற காரின் முன்பகுதியில் சேதமடைந்திருப்பதாகவும் தெரிகிறது.

அப்பொழுது, வாசன் அங்கிருந்து ஆட்டோவில் எரிச் சென்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: நாடாளுமன்ற தேர்தல்: நான்கு மாவட்டங்களில் செக் மேட் வைக்கும் திமுக! யார் அந்த வேட்பாளர்கள்?