சுட்டெரிக்கும் வெயிலில் காரின் மீது சப்பாத்தி சுடும் பெண்ணின் வீடியோ வைரல்!

வட இந்தியாவில், சுட்டெரிக்கும் வெயிலில் பெண் ஒருவர் கார் பேனட்டில் சப்பாத்தி சுடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சுட்டெரிக்கும் வெயிலில் காரின் மீது  சப்பாத்தி சுடும் பெண்ணின் வீடியோ வைரல்!

இந்தியாவில் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க உள்ள நிலையில், நாடு முழுவதும் அனல் காற்று வீச தொடங்கி விட்டது. அதுவும் வட இந்தியாவில் 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருவதால் அப்பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசாவில் தொடர்ந்து 100  டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஏப்ரலில் ஏற்பட்ட மிக நீண்ட வெப்ப அலை இதுவாகும் என்பதால் டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், ஒடிசாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. இப்படி இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படும் நிலையில், ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர் காரின் பேனட்டில் சப்பாத்தில் சுடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் கார் பேனட்டின் மீது மாவை உருட்டி சப்பாத்தி சுடுகிறார். அருகில் ஒரு பெண் உதவிக்கு நின்று கொண்டிருக்க, ஒரு சில நிமிடங்களில் சப்பாத்தி தயாராகி விடுகிறது.

இந்த வீடியோவை காலநிலை ஆர்வலர், லிசிப்ரியா கங்குஜம் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் நிலமாதப் பாண்டா ஆகியோர் பகிர்ந்துள்ளனர். வீடியோவை பார்த்த அனைவரும் இனிமேல் கேஸ் மிச்சம்ப்பா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இருப்பினும், தற்போது வைரலாகும் இந்த வீடியோ எங்கு எடுக்கபட்டது என இன்னும் உறுதிப்படுத்தப்பட தெரியவில்லை.