ஆந்திராவில் சேலை அணிந்து கோவிலுக்கு சென்ற மணமகன்

ஆந்திராவில் சேலை அணிந்து கோவிலுக்கு சென்ற மணமகனின் போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திராவில் சேலை அணிந்து கோவிலுக்கு சென்ற மணமகன்

ஆந்திராவில் சேலை அணிந்து கோவிலுக்கு சென்ற மணமகனின் போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பிச்சர்லபள்ளி கிராமத்தில் அங்கையா - அருணா மணமக்களின் திருமணச்சடங்கு நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் மணமகன் அங்கையா பெண் போல சேலை அணிந்தும், மணமகள் அருணா குர்தா பைஜாமா உடை அணிந்து அங்கலம்மா மற்றும் போலராம்மா கிராம தேவதை கோயிலுக்கு சென்று வழிபட்டனர். அம்மாவட்டத்தில் கும்மா என்ற வீட்டுப்பெயர் கொண்ட குடும்பங்களில் இதுபோன்ற பாரம்பரிய முறை கடைபிடிக்கபடுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.