பூமியின் வளமான பெண்...28 ஆண்டுகளில் 44 குழந்தைகள்..!!
40 வயதான பெண்மணி ஒருவர் இதுவரை 44 குழந்தைகளைப் பெற்று உலக சாதனை படைத்தது சமூகவலைதளங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
முதல் கர்ப்பம்:
ஆப்பிரிக்கா கண்டம் உகாண்டாவில் மரியம் நபடான்சி என்ற பெண்ணுக்கு 12 வயதிலேயே திருமணம் நடைபெற்று முடிந்தது. 13 வயதிலேயே கர்ப்பமான மரியத்துக்கு முதல் பிரசவத்திலேயே இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
4 முறை:
இதையடுத்து ஒவ்வொரு வருடமும் கர்ப்பமாகிய மரியம் சரசரவென குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இதில் 4 முறை இரட்டைக் குழந்தைகளை பெற்றவர் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளையும், மற்றும் ஐந்து பிரசவத்தில் 5 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். இந்த வரிசைப்பட்டியலில் இதுவரை இந்த பெண்ணுக்கு ஒரே ஒரு பிரசவத்தில் மட்டுமே ஒரு குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
28 ஆண்டுகளில்:
திருமணமாகி 28 வருடங்களைக் கடந்த மரியம், இதுவரை 44 குழந்தைகளைப் பெற்றுள்ளார். இவர்களில் 6 குழந்தைகள் உடல்நிலை மோசமாமாகி உயிரிழந்த நிலையில் தற்போது 20 ஆண் குழந்தைகளும், 18 பெண் குழந்தைகளும் என தற்போது 38 குழந்தைகள் உள்ளனர்.
சுகப்பிரசவமாகவே:
இதில் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால் பிறந்த 44 குழந்தைகளுமே சிசேரியன் முறையல்லாமல் சுகப்பிரசவமாகவே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 44 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ள இவர் வகாண்டா ஃபார் எவர் வுமனாய் மட்டுமின்றி பூமியின் வளமான பெண் எனவும் அழைக்கப்படுகிறார்.
இதையும் படிக்க: அறுவடை செய்யப்படாத பயிர்கள்... கால்நடைகளுக்கு தீவனமாகும் அவலம்... காரணம் என்ன?!!