காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மேலும் 7 பேர் பலி  

காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மேலும் 7 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மேலும் 7 பேர் பலி   

காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மேலும் 7 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலிபான்கள் ஆட்சிக்கு பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள் பலர் வெளிநாடுகளுக்கு தப்ப முயன்று வருகின்றனர். இதனால் வெளிநாட்டினரை மீட்க வரும் விமானங்களில் எப்படியாவது தப்பிவிட ஆப்கன் மக்கள் முயன்று வருகின்றனர். அதற்காக நாள்தோறும் காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆப்கானிஸ்தான் மக்கள் 7 பேர் உயிரிழந்ததாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் காபூல் விமான நிலையத்திற்குள் மக்களை நுழைய விடாதவாறு தலிபான்கள் தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் காபூல் விமான நிலையத்தை சுற்றி பதற்றம் காணப்படுகிறது. இதற்கிடையே அச்சுறுத்தல் காரணமாக காபூல் விமான நிலையத்தை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்கா படை தங்கள் நாட்டினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.