சுரங்கத்தில் நிலச்சரிவு..70 பேர் மாயம்...

மியான்மர் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலியானது தொடர்ந்து 70 பேர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

சுரங்கத்தில் நிலச்சரிவு..70 பேர் மாயம்...

வடக்கு மியான்மரில் உள்ள பச்சை மாணிக்க கற்களை வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 80 பேருக்கும் மேல் மாயமாகி உள்ளதாக மீட்புக் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இன்று உள்ளூர் நேரப்படி சுமார் 4 மணியளவில் கச்சின் மாநிலத்தின் பகந்த் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. உலகின் மிகப்பெரிய சுரங்கங்கள் உள்ளநிலையில், அங்கு பல ஆண்டுகளாக அங்கு ஏராளமான விபத்துக்களும் நிகழ்ந்து வருகின்றன. 

இந்த சுரங்கத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தது.ஆனால் உள்ளூர் வாசிகள் பெரும்பாலும் அந்த விதிகளை மீரி வருவதாக தெரிவிக்கின்றனர்.கொரோனா பாதிப்பில் ஏற்பட்டுள்ள வறுமையின் காரணமாக பொதுமக்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக பச்சை மாணிக்க கற்களை வெட்டியெடுக்கும் சுரங்கத் தொழிலாளர்கள் என்று கூறப்படும் நிலையில் தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

200 மீட்புக்குழுவினர் உடல்களை மீட்க தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சிலர் படகுகளை பயன்படுத்தி அருகில் உள்ள ஏரியில் இறந்தவர்களின் உடல்களை தேடிவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.