அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து - குழந்தைகள் உட்பட 13 பேர் பலி..

திடீரென பிடித்த தீ விபத்தால் குழந்தைகள் உட்பட 13 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து - குழந்தைகள் உட்பட 13 பேர் பலி..

அமெரிக்காவின் பென்சில்வேனியா என்ற மாகாணத்தில் உள்ள பிலதெல்பியா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் ஏற்பட்ட தீ  விபத்தானது கட்டிடம் முழுவதுமாக வேகமாக பரவியதாக சொல்கின்றனர்.தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு  வந்த மீட்பு குழுவினர் 50 நிமிடங்களாக போராடி கொளுந்து விட்டு எரிந்த தீயினை அனைத்துள்ளனர்.

மீட்பு குழுவினர் போராடி தீயினை அனைத்த போதிலும் குழுந்தைகள் உட்பட 13 பேர் தீயில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இரண்டு பேர் காப்பாற்றப்பட்ட பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தீப்பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பில் நெருப்பினை கண்டறியக் கூடிய கருவிகள் நான்கு இருந்ததாகவும் அவை நான்கும் வெலை செய்யாதது இவர்கள் பலியாகி இருப்பதற்கு காரணமாக உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.