திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை கொலை செய்த வெறிச்செயல்...

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை டாக்ஸி டிரைவர் ஒருவர் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது

திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை கொலை செய்த வெறிச்செயல்...

மேற்கு வங்காளத்தை சேர்ந்த டாக்ஸி டிரைவரான இஸ்லாமிற்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் இவர் தற்போது தனது மூன்றாவது மனைவியுடன் ஹரியான மாநிலத்தில் உள்ள குருகிராம் என்ற பகுதியில் வசித்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து அந்த கிராமத்தில் இவருக்கு நான்கவதாக ஒரு பெண் மீது ஈர்ப்பு வந்துள்ளது.அவர் அதே பகுதியை சேர்ந்த 25 வயதான நர்ஹிஸ் ஹடூன் என்ற இளம்பெண்ணோடு பழகி வந்துள்ளார்.இது காதாலாக மாறிய நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் பால் வாங்குவதற்காக சென்ற நர்ஹிஸ் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவர்களது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து போலீசார் நர்ஹிஸை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.போலீசாரின் தேடுதலில் நர்ஹிஸ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.

சிசிடிவியை ஆய்வு செய்தததில் அவர் கடைசியாக ஒரு டாக்சியில் ஏறிச்சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த டாக்சியை இஸ்லாம் இயக்கி சென்றது அவ்வப்போது தெரியவந்தது.இதனை தொடர்ந்து அவரை கைது செய்ய போலீசார் முற்பட்ட நிலையில் அவர் அந்த கிராமத்தை விட்டு தப்பி ஓடியுள்ளது மேலும் தெரியவந்தது.தப்பி சென்ற இஸ்லாமை பிடிக்க காவல் துறை தனிப்படை அமைத்து தேடி வந்துள்ளது.

தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில் இந்திய வங்காளதேசத்தின் சர்வதேச எல்லைப்பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் லாவகமாக சென்று பிடித்துள்ளனர்.மேலும் இஸ்லாமிடம் விசாரணையை மேற்கொண்டதில் அவர் ஏற்கவனே திருமணம் செய்த கதையெல்லாம் வெளியே வந்துள்ளது.நர்ஹிஸிடம் இவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டுள்ளதாக கூறியுள்ளார்,அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் அவரை கொலை செய்ததாகவும், பின்னர் அக்கிராமத்தில் இருந்து தப்பித்து விட்டதாகவும் போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் இதனை தொடர்ந்து போலீசார் இஸ்லாமிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.