எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவால் விபத்து... வங்கி கட்டடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி...

பாகிஸ்தானில், எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவால் விபத்து... வங்கி கட்டடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி...

கராச்சியில் உள்ள ஷேர்ஷா பராச்சா சவுக் பகுதியில் வங்கி கட்டிடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் கழிவுநீர் குழாய்களை இணைத்து அமைக்கப்பட்டுள்ள கால்வாயின் கீழ்  எரிவாயு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, வங்கி கட்டிடம் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

இந்த கோர விபத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என 10 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் மேலும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார், இடிபாடுகளை அகற்றி, விபத்தில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.