மீண்டும் பாலைவன மோட்டார், கார்பந்தயங்கள் தொடக்கம்.!!

ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் கொரோனா காலத்துக்கு பின்னர் மீண்டும் பாலைவன கார் மற்றும் மோட்டார் பந்தயங்கள் தொடங்கி உள்ளன.

மீண்டும் பாலைவன மோட்டார், கார்பந்தயங்கள் தொடக்கம்.!!

ஜகோரா நகரில் உள்ள பாலைவன பகுதியில் தொடங்கி உள்ள இந்த பந்தயங்களில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்று வாகனங்களை மின்னல் வேகத்தில் ஓட்டி புள்ளிகளை குவித்து வருகின்றனர்.

முதல் நாள் பந்தயத்தில் கத்தாரின் நாசர்- அல் அத்தியா அவரது இணை ஓட்டநர் பிரான்சின் மாத்யூ பம்மேல் உடன் இணைந்து அதிக புள்ளிகள் குவித்து முதல் இடத்தில் உள்ளார்.

இந்த கார் பந்தயத்தில் அடுத்த 4 நாட்கள் மிக அதிக கவனம் செலுத்தி வாக சூடுவோம் என அல் அத்தியா தெரிவித்துள்ளார்.

முதல் நாளன்று போட்டியில் எந்தவித சிரமமும் இல்லை என தெரிவித்துள்ளார். இதே போன்று பைக் ரேசில் ஆஸ்திரிய வீரர் மத்தியாஸ வாக்னர் தற்போது முதல்நிலையில் உள்ளார்.