அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கோரி பாரத் பயோடெக் விண்ணப்பம்.!!
உலக சுகாதார அமைப்பின் அவசர கால பயன்பாட்டிற்கான மருந்துகளின் பட்டியலில் கோவாக்சினை சேர்க்க, பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அவசர கால பயன்பாட்டிற்கான மருந்துகளின் பட்டியலில் கோவாக்சினை சேர்க்க, பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.
கோவிஷீல்டு தடுப்பூசியை போல தனது தடுப்பு மருந்துக்கும், அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியைப் பெற அந்நிறுவனம் முயற்சித்து வருகிறது.
தற்போது கோவாக்சின் தொடர்பான ஆவணங்களை உலக சுகாதார அமைப்பிடம் சமர்பித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம், அதனை ஆய்வு செய்து அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கோரியுள்ளதாக, அந்நிறுவனத்தின் இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.