கம்போடியா ஹோட்டல் தீ விபத்து...அதிகரிக்கும் உயிரிழப்புகள்!!!
பாய்பெட்டில் உள்ள கிராண்ட் டைமண்ட் ஹோட்டலில் தீ விபத்து சம்பவம் நடந்துள்ளது. இங்கு கடந்த சில மணி நேரங்களாக ஹோட்டல் முழுவதும் தீயால் சூழப்பட்டுள்ளது. பலர் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஜன்னல்களிலிருந்து குதித்துள்ளனர்.
கம்போடியாவின் பாய்பெட்டில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹோட்டலில் ஏற்பட்ட தீ மிகவும் கடுமையாக உள்ளது, இன்னும் 50 க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் முயற்சிகள் பல போராட்டங்களுக்கு பிறகு சாத்தியமானதாகவும் கூறியுள்ளனர்.
உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, ஹோட்டல் கட்டிடம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது எனவும் தீ விபத்திற்கு பின்னர் கட்டிடத்தின் ஒரு பெரிய பகுதி இடிந்து விழுந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுதியில் சிக்கியிருந்த 53 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-நப்பசலையார்
இதையும் படிக்க: தொடரும் ஏவுகணை தாக்குதல்கள்....பதற்றத்தில் மக்கள்...என்ன செய்ய போகிறது உக்ரைன்?!!