"வாக்னர் தலைவர் மீதான வழக்குகள் கைவிடப்படும்":  ரஷ்ய அதிபர் மாளிகை கிரெம்ளின்!

"வாக்னர் தலைவர் மீதான வழக்குகள் கைவிடப்படும்":  ரஷ்ய அதிபர் மாளிகை கிரெம்ளின்!

ரஷ்யாவில் கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் தலைவர் பெலாரசுக்குச் செல்ல உள்ளதாகவும், அவர் மீதான வழக்குகள் கைவிடப்படும் என்றும் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அறிவித்துள்ளது. 

உக்ரைன் மீதான போரில், ரஷிய பாதுகாப்பு படையினருடன் இணைந்து 'வாக்னர்' எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில் ரஷிய ராணுவ அதிகாரிகள் மீதும், வாக்னர் அமைப்பின் மீதும் தொடர்ந்து அடக்குமுறைகளை செயல்படுத்தி வருவதாக வாக்னர் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸ் தெரிவித்திருந்தார். மேலும் உக்ரைனுக்கு எதிரான போரின் போது தங்களுக்கு சரியான ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் வாக்னர் அமைப்பு ரஷியாவுக்கு எதிராக நேற்று கிளர்ச்சியில் ஏற்பட்டது.

மேலும் ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை வாக்னர் கைப்பற்றியதாக தகவல் வெளியானதால் கோபமடைந்த ரஷியா, கடும் எச்சரிக்கையை விடுத்தது. இந்த அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி புரிகோஸை கைது செய்யவும் கிளர்ச்சியாளர்களை கண்டதும் சுடவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக கூறியதைத் தொடர்ந்து, உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக தனது படைகள் ரோஸ்டோவ்-ஆன்-டானிலிருந்து வெளியேறுவதாக வாக்னர் தலைவர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் அவர் மீதான வழக்குகள் கைவிடப்படும் என்றும் வாக்னர் கழகம், உக்ரைன் தாக்குதல் திட்டங்களை பாதிக்காது என்றும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், கிளர்ச்சியாளர்களால் ஏற்பட்ட பதட்டத்தைத் தணிக்கும் வகையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வாக்னர் குழு தலைவர் பெலாரசுக்குச் செல்கிறார் எனவும், அவர் மீதான கிரிமினல் வழக்கு மூடித்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். வாக்னர் படை வீரர்களை ரஷியா தண்டிக்காது எனவும் அவர்களின் வீரச் செயல்களை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபை மீது ஏறி சாமி தாிசனம் செய்ய அனுமதியில்லை!!