சிலி நாட்டில் மாணவர்கள் மற்றும் காவல்துறை இடையே மோதல்!

சிலி நாட்டில் மாணவர்கள் மற்றும் காவல்துறை இடையே மோதல்!

தென்னமெரிக்க நாடான சிலியில் இலவச போக்குவரத்து, விரிவான பாலியல் கல்வி, தொழில்நுட்ப உயர்நிலைப் பள்ளிகளில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில், மாணவர் அமைப்பினர் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர். இருப்பினும் மாணவர்கள் கலைந்து செல்லாததால், போராட்டக்காரர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் தடியடி நடத்தியும் போலீசார் அவர்களை கலைத்தனர். இதனால் சாண்டியாகோ நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.