போலந்து நாட்டின் அதிபருக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று !!

போலந்து நாட்டின் அதிபருக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

போலந்து நாட்டின் அதிபருக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று !!

போலந்து நாட்டின் அதிபர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் சிலருக்கு அண்மையில் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனை தொடர்ந்து, கொரோனா பரிசோதனை செய்து கொண்ட அதிபர் ஆண்ட்ரெஜ் துடாவுக்கு, வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. எனினும் அவருக்கு வைரஸ் தொற்றுக்கான எந்தவித அறிகுறிகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆண்ட்ரெஜ் துடா கொரோனா பாதிப்புக்கு ஆளான நிலையில், தற்போது 2-வது முறையாக அவரை வைரஸ் தொற்றியுள்ளது. 49 வயதாகும் ஆண்ட்ரெஜ் துடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரின் உதவியாளர் பாவெல் ஸ்ரோட் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.