ஹீரோக்களாக மாறிய இங்கிலாந்து அணி கால்பந்து வீரர்கள்: அதிபர் பாராட்டு!

இங்கிலாந்து கால்பந்து அணி வீரர்கள் ஹீரோக்களை போல் விளையாடியதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஹீரோக்களாக மாறிய இங்கிலாந்து அணி கால்பந்து வீரர்கள்: அதிபர் பாராட்டு!

இங்கிலாந்து கால்பந்து அணி வீரர்கள் ஹீரோக்களை போல் விளையாடியதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் நடைபெற்ற 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி யூரோ கோப்பையை தன் வசப்படுத்தியது இத்தாலி. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், யூரோ 2020 இறுதிப் போட்டியில் இத்தாலிக்கு எதிராக இங்கிலாந்து அணியினர் ஹீரோக்களைப் போல விளையாடியதாக பதிவிட்டுள்ளார்.

போட்டியின் முடிவும் இதயத்தை நொறுக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும் இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் மிக சிறந்த பாராட்டுதலுக்கு உரித்தானவர்கள் எனவும் பாராட்டியுள்ளார்.