கிரீஸ்: பயணிகள் கப்பலில் திடீர் தீ விபத்து.. 288 பேரின் நிலைமை? மீட்பு பணி தீவிரம்

கிரீஸ் அருகே 288 பேருடன்  சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

கிரீஸ்: பயணிகள் கப்பலில் திடீர் தீ விபத்து.. 288 பேரின் நிலைமை? மீட்பு பணி தீவிரம்

இத்தாலியைச் சேர்ந்த அந்த கப்பல், யூரோஃபெரி ஒலிம்பியா பிரிண்டிசி துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்தது. கிரீஸ் அருகே கோர்பு தீவு அருகே கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

239 பயணிகள் மற்றும் 51 ஊழியர்கள் கப்பலில் இருந்ததாகவும் பெரும்பாலானவர்கள் மீட்கப்பட்டு கோர்பு துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அமைச்சர் யியானிஸ் தெரிவித்துள்ளார். கப்பலுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.