ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் சிரியா தலைவர் கொலை!

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் சிரியா தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் சிரியா தலைவர் கொலை!

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் சிரியா தலைவரை ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்றதாக அமெரிக்கா ராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.

ஜின்டாய்ரிஸ் பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், பயங்கரவாதக் குழுவின் சிரியா கிளையின் தலைவரும், உலகெங்கிலும் உள்ள தன முக்கிய ஐந்து தலைவர்களில் ஒருவருமான மகேர் அல் அகல் கொல்லப்பட்டடுள்ளதாகவும், மேலும் ஒரு தீவிரவாதி படுகாயம் அடைந்துள்ளதாகவும் பெண்டகன் மத்திய காமண்ட் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 

சிரியா மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகமும் மகேர் அல் அகல் கொல்லப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது. 

நமது தாய்நாட்டிற்கும் உலகெங்கிலும் உள்ள நமது நலன்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அனைத்து பயங்கரவாதிகளுக்கும் ஒரு சக்திவாய்ந்த செய்தியை இது அனுப்பும் எனவும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் வேலைகளை அமெரிக்கா தொடரந்து செய்யும் என அமெரிக்கா அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.