அமெரிக்க படைகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்த ஐஎஸ்.ஐஎஸ் திட்டம்…  

ஆப்கானிஸ்தானில் இருந்து அந்நாட்டு மக்களை வெளியேற்ற உதவும் அமெரிக்க படைகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்த ஐஎஸ் ஐஎஸ் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க படைகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்த ஐஎஸ்.ஐஎஸ் திட்டம்…   

ஆப்கானிஸ்தானில் இருந்து அந்நாட்டு மக்களை வெளியேற்ற உதவும் அமெரிக்க படைகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்த ஐஎஸ் ஐஎஸ் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த தற்கொலை படை தாக்குதலை ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிள் நிகழ்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 103 ஆக அதிகரித்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 90 பேர், அமெரிக்கப் படைவீரர்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் அந்நாட்டு குடிமக்களுக்கு உதவும் அமெரிக்க படைகள் மீது ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்த கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.