2023ல் அதிகரிக்கும் பணவீக்கம்.....மக்களின் நிலை என்ன?!!

2023ல் அதிகரிக்கும் பணவீக்கம்.....மக்களின் நிலை என்ன?!!

தென் கொரியாவில் 2023-ம் ஆண்டிலும் பணவீக்கம் அதிக அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

தென் கொரியாவில் கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது முந்தைய ஆண்டை விட 5 புள்ளி 1 சதவீதம் அதிகம் என்றும் 1998-ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்டுள்ள மிக அதிகமான பதிவு என்றும் கூறப்படுகிறது.  தென் கொரிய மக்கள் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி தங்கள் அன்றாட செலவுகளை குறைப்பது குறித்த பதிவுகளை தற்போது வெளியிட்டு வருகின்றனர். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  துணிவு- வாரிசு ரிலீஸ்....கிழிக்கப்பட்ட பேனர்கள்....