ஐவரி கோஸ்ட் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து... முன்னாள் பிரதமருக்கு ஆயுள் தண்டனை...

ஐவரி கோஸ்ட் நாட்டின் முன்னாள் பிரதமருக்கு ஆயுள் தண்டனை

ஐவரி கோஸ்ட் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து... முன்னாள் பிரதமருக்கு ஆயுள் தண்டனை...
நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில், ஐவரி கோஸ்ட் நாட்டின் முன்னாள் பிரதமருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007-2012 கால கட்டத்தில் குய்லூம் சோரோ பிரதமராக பதவி வகித்தார்.
 
நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் நாட்டை விட்டு ஓடி பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் இவர் மீதான வழக்கை விசாரித்த ஐவரி கோஸ்ட் நீதிமன்றம், குய்லூம் சோரோ மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.
 
இந்த தண்டனையை தாம் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், அதனை எதிர்த்து போராட போவதாகவும், தமது டுவிட்டர் பக்கத்தில் குய்லூம் சோரோ அறிவித்துள்ளார்.