அமெரிக்க கிறிஸ்தவ மதபோதகர் உள்ளிட்ட 17 பேர் கடத்தல்... ஹைதி நாட்டில் பரபரப்பு...

ஹைதி நாட்டில் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 17 பேர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க கிறிஸ்தவ மதபோதகர் உள்ளிட்ட 17 பேர் கடத்தல்... ஹைதி நாட்டில் பரபரப்பு...

தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றி வரும் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ ஊழியர்கள், தங்கள் குடும்பத்தினரோடு அருகில் உள்ள அனாதை ஆசிரமத்திற்கு சென்றுவிட்டு பேருந்தில் திரும்பியுள்ளனர். 

திடீரென அவர்களை வழிமறித்த மர்ம கும்பல், சிறுவர்கள் உள்பட 17 பேரை கடத்தி சென்றுள்ளது. கடத்தல்காரர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? கடத்தப்பட்டவர்களின் தற்போதைய நிலை என்ன? உள்ளிட்ட எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக ஹைதி அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக, போர்ட் அவ் பிரின்சில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.