எங்களின் அடுத்த இலக்கு காஷ்மீர்... இந்தியாவை அச்சுறுத்தும் அல்கொய்தா...

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி இருப்பதற்கு பாராட்டு தெரிவித்துள்ள அல் கொய்தா தீவிரவாத அமைப்பினர் தங்களின் அடுத்த இலக்கு காஷ்மீர் என தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எங்களின் அடுத்த இலக்கு காஷ்மீர்... இந்தியாவை அச்சுறுத்தும் அல்கொய்தா...

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தலிபான்களின் கைகளில் வந்ததில் இருந்து உள்நாட்டு மற்றும் பிற தீவிரவாத குழுக்கள் அனைத்தும் முழு உத்வேகத்தில் செயல்பட தொடங்கிவிட்டன. 

இதனால் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாகவும், காஷ்மீரில் தாலிபான்களின் உதவியுடன் தீவிரவாத குழுக்கள் பல நாச வேலைகளில் ஈடுபட கூடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. 

இந்த நிலையில் தாலிபான்களின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்துள்ள அல் கொய்தா அமைப்பினர் தங்களின் அடுத்த இலக்கு காஷ்மீர் என தெரிவித்துள்ளனர்.  

உலகளவில் இஸ்லாமிய நிலங்களை மீட்டெடுக்க தாலிபான்களுக்கு அழைப்பு விடுத்த அல் கொய்தா அமைப்பினர். அப்பட்டியில் முதலில் இருப்பது காஷ்மீர் என தெரிவித்துள்ளனர்.