மகாராணியின் கடைசி புகைப்படம்! அரிய போட்டோ வைரல்!!!
பக்கிங்ஹாம் அரண்மனை மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கை முன்னிட்டு அவரது காணாத போட்டோவை வெளியிட்டுள்ளது .
75 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த ஒரே மகாராணி என்ற சாதனை புரிந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் சமீபத்தில் இறந்தார். அவரது மறைவுக்கு பல கோடி மக்கள் தங்களது வருத்தங்களைத் தெரிவித்து வருகின்றனர். உலகால் விரும்பப்பட்ட ராணி என அனைவராலும் அறியப்படும் எலிசபெத்தின் மறைவு, உலகை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது என்றே சொல்லாம்.
இதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் திரௌபதி முர்மு உட்பட, உலக தலைவர்கள் அனைவரும், நேரில் இசென்று மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், மகாராணியின் ஒரு அரிய போட்டோவை, பக்கிங்கம் மாளிகை வெளியிட்டுள்ளது. இது தற்போது படு வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | மறைந்த ராணியின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள பல நாடுகளுக்கு தடை.. ரஷ்யா உட்பட.. !
மிக பிரகாசமாக சிரித்த படி இருக்கும், மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இந்த புகைப்படத்தை, அவரது ப்ளாட்டினம் நிரைவாண்டில் எடுக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. வெளிர்நீல நிற உடை அணிந்து, முத்தால் ஆண அட்டிகை மற்றும் காதணிகள் அணிந்திருக்கிறார். மேலும், தனது தந்தை முன்னாள் அரசர், ஆறாவது ஜார்ஜ், தனது 18வது பிரந்தநாளுக்கு பரிசாகக் கொடுத்த அக்வாமரைன் மற்றும் டயமண்ட் கிளிப் ப்ரூச்களை அணிந்துள்ளார் மகாராணி.
அழகான இந்த புகைப்படம், ரசிகர்களால் பகிரப்பட்டு உலகளவில் வைரலாகி வருகிறது.
Ahead of Her Majesty The Queen’s State Funeral, a new photograph has been released.
— The Royal Family (@RoyalFamily) September 18, 2022
The photo was taken to mark Her Majesty’s Platinum Jubilee - the first British Monarch to reach this milestone.
Tomorrow, millions will come together to commemorate her remarkable life. pic.twitter.com/UyVfjVvJgw