கீவ் நகரம் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய ரஷ்யா!!!

கீவ் நகரம் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய ரஷ்யா!!!

ரஷ்யா- கிரிமியா இணைப்பு பாலம் தகர்க்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கீவ் நகரம் மீது ரஷ்யா அடுத்தடுத்து  வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ரஷ்யா கிரிமியாவை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்த பாலம், கார் குண்டு வெடிப்பில் சேதமடைந்தது. இது பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்ட ரஷ்யா, உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டியது.

மேலும் தெரிந்துகொள்க:  ”கிரிமியாவை திரும்ப பெறுவோம்” உக்ரைன் அதிபர்

இந்தநிலையில்  கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக ஜூன் மாதத்திற்கு பிறகு கீவ் நகரம் மீது ரஷ்யா இன்று மீண்டும் 3 முறை வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளது.  இதில் 8 பேர் உயிழந்ததாகவும், 24 பேர் படுகாயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க:   அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த வடகொரியா!!!