உக்ரைனின் பல்வேறு ராணுவ நிலைகள் மீது 4 அதிதீவிர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்திய ரஷ்யா!!

பல்வேறு ராணுவ நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல்..

உக்ரைனின் பல்வேறு ராணுவ நிலைகள் மீது 4 அதிதீவிர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்திய ரஷ்யா!!

உக்ரைனின் பல்வேறு ராணுவ நிலைகள் மீது ரஷ்யா இன்று மிகப் பெரிய தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. பீரங்கிகள், ஏவுகணைகள் மற்றும் விமானப்படை மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் எரிபொருள் கிடங்குகள், வெடி மருந்து கிடங்குகள் என நூற்றுக்கணக்கான இலக்குகள் குறி வைத்து தகர்க்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

லுஹான்ஸ்க், வின்னிட்சியா மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளில் உள்ள நான்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணக் கிடங்குகளை  இஸ்கண்டர் ஏவுகணைகளைப் பயன்படுத்தி அழித்ததாகவும் கூறியுள்ளது.

இதனிடையே லுவிவ் நகரில் 5 ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை அந்நகர மேயர் உறுதிப்படுத்தியுள்ளார்.