பள்ளி வகுப்பறையில் துப்பாக்கிச்சூடு...  4 பேர் படுகாயம்...

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

பள்ளி வகுப்பறையில் துப்பாக்கிச்சூடு...  4 பேர் படுகாயம்...

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் படுகாயமடைந்தனர். ஆர்லிங்டனில் உள்ள டிம்பர்வியூ உயர்நிலைப் பள்ளியில் நேற்று இரு மாணவர்களிடையே நடந்த மோதலின் போது, திடீரென துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயமுற்ற 4 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். முதற்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்தியது 18 வயதான மாணவன் என்றும், சகமாணவனுடன் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீமோத்தி ஜார்ஜ் என்ற அந்த மாணவனை கைது செய்துள்ள போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.