உலகின் உயரமான மனிதர்...மனைவியை தேடி ரஷ்யாவிற்கு சென்ற சம்பவம்!!

புதிய துணையை தேடி உலகின் உயரமான மனிதராக திகழும் சுல்தான் கோசென் என்பவர் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

உலகின் உயரமான மனிதர்...மனைவியை தேடி ரஷ்யாவிற்கு சென்ற சம்பவம்!!

மாஸ்கோவை சேர்ந்த இவருக்கு 39 வயதான இவர் தென்கிழக்கு துருக்கிய நகரமான மார்டினில் பிறந்ததாக சொல்லப்படுகிறது.மேலும் இவர் உலகின் மிக உயரமான மனிதர் என கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

பொதுவாகவே மனிதரின் வளர்ச்சிக்கு காரணமாக இருப்பது மூளையின் தண்டுவடத்தின் கீழ் அமைந்துள்ள பிட்யூட்டரி சுரப்பி ஆகும்.அது அனைவருக்கும் சராசரியாக வளர்ந்து வரும் நிலையில் சுல்தான் கோசென் அவர்களுக்கு அசாதரணமாக வளர்ந்துள்ளதால் அவர் அசுர வளர்ச்சியை கண்டுள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது.

இவரின் அடி 8 எனவும் 3 அங்குலம் உயரத்துடன் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்...இவர் 2013 ஆம் ஆண்டு சிரியப் பெண்ணான மெர்வ் டிபோவை மணந்துள்ளார். அவர் அரபு மொழியை மட்டுமே பேசுவதாக இருந்துள்ளார்.இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததன் காரணமாக இருவரும் சமீபத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து சுல்தான் கோசென் தனது  புது மனைவியை தேடி ரஷ்யாவிற்கு பயணம் செய்து வருகிறார்.மேலும் இது குறித்து தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர் நான் புதிய காதலியை தேடி வந்துள்ளேன் எனவும் ரஷ்யாவிற்கு வந்ததற்கான காரண்மாக ரஷ்ய பெண்கள் மிகவும் அன்பானவர்கள் எனவும் அழகானவர்கள் என அறிந்தேன்,மேலும் கூறிய அவர் எனக்கு பிடித்தமான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு துருக்கி அழைத்து செல்ல விரும்புவதாகவும் அவர் தனக்கு ஒரு மகனையோ மகளையோ பெற்றுக்கொடுத்தல் வேண்டும் என்பதையே விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.