வீடு வீடாக சென்று பெண்களை துன்புறுத்தும் தலிபான்கள்.. வலுக்கும் கொடுமை

தலிபான்கள் வீடு  வீடாக சென்று பெண்களை கடத்தி செல்வதாக இந்தியாவில் வசிக்கும் அவர்களது உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வீடு வீடாக சென்று பெண்களை துன்புறுத்தும் தலிபான்கள்.. வலுக்கும் கொடுமை

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு நிலைமை மோசமாகியுள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாக கிடைத்த விமானத்தில் தப்பித்தால் போதும் என உயிர் பயத்தில் வெளியேறி வருகின்றனர்.

தற்போதைய நிலை உலக நாடுகளை மட்டுமல்லாது இந்தியாவில் வசிக்கும் ஆப்கான் மக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆப்கான் முழுவதுமாக தலிபான்கள் கையில் சிக்கும் வரை அங்குள்ள உறவினர்களுடன் தொடர்பில் இருந்ததாக தெரிவித்தும் அவர்கள், நிலைமை மிக மோசமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது வீடுகளுக்கே சென்று தலிபான்கள் பெண்களை கடத்தி தகாத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக பெண்கள் சுதந்திரமாக வெளியே திரிந்த நிலையில், தற்போது அவர்கள் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.