இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்ற தாலிபன் தலைவர்...

தோகாவில் இந்திய தூதருடன் பேச்சு நடத்திய தாலிபான் தலைவர் ஷெர் முகமது அப்பாஸ் இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்று பணியாற்றியவர் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்ற தாலிபன் தலைவர்...

கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று இந்திய தூதர்  தீபக் மிட்டலை தாலிபான்களின் தூதரக பிரதிநிதி என கூறப்படும் ஷெர் முகமது அப்பாஸ் என்பவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இவர் தாலிபான்களை போல் அல்லாமல் சரளமான ஆங்கிலத்தில் உரையாடுவதாக கூறப்படுகிறது.

மேலும் இவர் இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்று அதிகாரியாக பணியாற்றியுள்ளாராம். 1979  முதல் 1982க்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்று பின்னர் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் அதிகாரியாக பணியாற்றியுள்ளாராம்.

தலிபான்களில்  அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள அப்போதைய அமெரிக்கா அதிபர் பில் கிளிண்டனை சந்தித்து சமாதான பேச்சு நடத்தியுள்ளாராம்.