தலைநகர் காபூலை நோக்கி முன்னேறும் தாலிபான்கள்... ஜலாலாபாத் நகரை கைப்பற்றினர்... 

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரையும் கைப்பற்றியுள்ள தாலிபான்கள், தலைநகர் காபூலை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

தலைநகர் காபூலை நோக்கி முன்னேறும் தாலிபான்கள்... ஜலாலாபாத் நகரை கைப்பற்றினர்... 

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படை விலகியது முதல், அங்கு நெருக்கடியான சூழல் நிலவி வருகிறது. தாலிபான்கள் பெரும்பாலான நகரங்களை கைப்பற்றி, அதிபர் அஷ்ரப் கனியின் வீழ்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். தொடர்ச்சியான போர் காரணமாக ஆப்கான் படைகளும் துவண்டுள்ளன.

இந்த நிலையில் தொடர் சண்டை காரணமாக நகர்கார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரையும் பயங்கரவாதிகள் கைப்பற்றி, அங்கு வசிப்போரை சித்ரவதை செய்து வருகின்றனர். காபூலுக்கு கிழக்கே இந்த நகரம் அமைந்துள்ளதால், விரைவில் அவர்கள் காபூலையும் கைப்பற்றக்கூடும் என அஞ்சப்படுகிறது.