ஆப்கானிஸ்தானில் இருந்து 48,000 பேரை வெளியேற்றிய அமெரிக்கா...

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 48 ஆயிரம் பேரை வெளியேற்றியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து 48,000 பேரை வெளியேற்றிய அமெரிக்கா...

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 48 ஆயிரம் பேரை வெளியேற்றியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, அந்நாட்டில் இருந்து தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா வெளியேற்றி வருகிறது. சொந்தநாட்டு மக்கள் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களையும் அமெரிக்கா வெளியேற்றி வருகிறது.

இந்தநிலையில், அமெரிக்காவின் வெள்ளைமாளிகை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து நேற்று ஒரேநாளில் 10 ஆயிரத்து 900 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும், இதில், 15 அமெரிக்க ராணுவ விமானங்களில் 6 ஆயிரத்து 600 பேரும், நட்பு நாடுகளின் 34 விமானங்களில் 4 ஆயிரத்து 300 பேரும் வெளியேற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல், ஆப்கானிஸ்தானில் இருந்து 48 ஆயிரம் பேரை அமெரிக்கா வெளியேற்றி உள்ளதாகவும், ஜூலை மாத இறுதியில் இருந்து மொத்தம் 53 ஆயிரம் பேரை இடமாற்றம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.