உலகை நெருக்கும் பொருளாதார நெருக்கடி...பனாமா நாட்டிலும் வெடித்த போராட்டம்!

உலகை நெருக்கும் பொருளாதார நெருக்கடி...பனாமா நாட்டிலும் வெடித்த போராட்டம்!

இலங்கையை தொடர்ந்து பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் பனாமா நாட்டிலும் வெடித்துள்ளது. ஆனால் அந்த போராட்டத்தை எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களே கையிலெடுத்துள்ளனர்.

பல்வேறு நாடுகளில் பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடியால் வெடிக்கும் போராட்டம்: 

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போரின் தாக்கம் உலக அளவில்  எதிரொலித்து வருகிறது. குறிப்பாக எரிபொருள் விலை உயர்வால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்து அன்றாட வாழ்க்கைச் செலவுக்கே பொதுமக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் போர் நீடிக்க, நீடிக்க பல நாடுகளில் மக்களின் நிலை மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் இலங்கை தொடங்கி பாகிஸ்தான், நேபாளம், பிரேசில், அர்ஜெண்டினா, பெரு, அல்பேனியா என பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.  

பனாமா நாட்டிலும் தொடங்கிய போராட்டம்: 

அந்த வரிசையில் எரிபொருள் மற்றும் அனைத்துப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து பனாமா நாட்டில் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு மிகவும் வித்தியாசமாக, எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களே போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அவர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவு கொடுத்துள்ளனர். நிலைமை கைமீறிப் போய் விடாமல் இருக்க பனாமா அரசு போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.