ஆன்லைன் காதலால் பாதாள அறையில் ஒரு வார காலமாக அடைத்து வைக்கப்பட்ட பெண்..

ஆண் நண்பர் வீட்டில் பாதள அறையில் ஒரு வார காலமாக இருந்த பெண்ணை மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஆன்லைன் காதலால் பாதாள அறையில் ஒரு வார காலமாக அடைத்து வைக்கப்பட்ட பெண்..

காணமல் போனதாக தேடப்பட்ட 19 வயதான இளம்பெண்ணை நிர்வாணமாக மீட்கப்பட்ட சம்பவம் அமெரிக்க பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அப்பெண் ஆன்லைன் மூலம் சந்தித்த நபரால் இந்த கொடுமையை சந்திக்க நேரிட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த மடைலின் என்ற பெண் காணமல் போன நிலையில் அவரின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சிசிடிவி ஒன்றில் மடைலின் கடைசியாக இருந்தது பதிவாகிய நிலையில் அதனை தொடர்ந்து விசாரணை செய்த அதிகாரிகள் மடைலின் செல்ஃபோனில் இருந்து அவரது குடுமபத்திற்கு கடைசியாக ஒரு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்,அதில் அவர் நான் உங்களை நேசிக்கிறேன் I LOVE YOU என அனுப்பியுள்ளார்.

அதன்பின் அவரது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.மேலும் கடைசியாக அவர் இருந்த செல்ஃபோன் டவரை ஆராய்ச்சி செய்தனர்.தொடர்ந்து விசாரித்த  போலீசார் இறுதியில் பிரவுன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அந்த இளைஞரை போலீசார் விசாரித்த போது அவர் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.இதையடுத்து போலீசாரின் கண்களில் அங்கிருந்த மடைலின் ஐடி கார்டு தென்பட்டுள்ளது.பிறகு பிரவுனின் வீட்டை சோதனை செய்தனர்.அவ்வப்போது மடைலின் பாதளா அரையில் நிர்வான கோலத்தில் இருந்துள்ளார்.அவரை மீட்ட அதிகாரிகள் பிரவுனிடம் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

இளைஞரிடம் நடத்திய விசாரனையின் போது அவர் இருவரும் சேட்டிங் செயலி ஒன்றின் மூலம் பழகி நண்பர்களானதும் சந்திக்க திட்டமிட்டு அவரை வீட்டிற்கு அழைத்து சென்றதாகவும் மடைலினடம் உடலுறவு கொள்ள விருப்பம் இருப்பதாக தெரிவித்தது தொடர்ந்து மடைலின் மறுக்கவே அவரை பல்வெறு விதத்தில் வற்புறுத்தி வந்ததாகவும் அதனுடன் அவரின் செல்ஃபோன் போன்ற அனைத்து பொருட்களையும் அவரிடம் இருந்து பறித்துள்ளார். 

இதனை தொடர்ந்து பிரவுனின் மீது கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் போன்ற சட்டத்தின் கீழ் வழக்குகள் அவர்மீது பாய்ந்தன.மேலும் இது குறித்து போலீசார் பெண்கள் பார்த்து இருக்க வேண்டும் எனவும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பார்த்து இருத்தல் வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியதோடு மடைலின் தனியாக சென்றதே குற்றவாளிக்கு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.