தாய்லாந்தில் குரங்குத்திருவிழா... ஆர்வத்துடன் கண்டுகளித்த சுற்றுலாப்பயணிகள்...
தாய்லாந்தில் நடைபெற்ற குரங்கு திருவிழாவை, சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
தாய்லாந்தின் லோப்புரிக்கு சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதில், குரங்குகள் முக்கிய பங்குகள் வகிக்கின்றன. அதற்காக குரங்குகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, இந்த விழாவானது பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குரங்குத்திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பிய நிலையில், இந்த ஆண்டு குரங்குத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், இரண்டு டன் பழங்கள் மற்றும் காய்கறிகள், ஆயிரக்கணக்கான குரங்குகளுக்கு விருந்தாக படைக்கப்பட்டன.
காய்கறிகள் மற்றும் பழங்களின் குவியல் மீது ஏறி, வாழைப்பழங்கள் மற்றும் அன்னாசிப்பழங்களை சாப்பிடுவதை, சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். அதிலும் சில சுற்றுலாப் பயணிகள், குரங்குகள் ஒன்றுக்கொன்று விளையாடுவதை கேமரா மூலம் படம் பிடித்தனர்.