ஹிஜாப் அணியாத பெண்கள் விலங்குகளை போல் தோற்றமளிக்க முயல்கின்றனர் - தலிபான்கள்!

ஹிஜாப் அணியாத பெண்கள் விலங்குகளை போல் தோற்றமளிக்க முயல்கின்றனர் - தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பெண்களுக்கு எதிரான பல அடக்குமுறை சட்டங்களை கொண்டு வந்தனர்.

அந்த வகையில் பெண்கள் தலை முதல் கால் வரை மறைத்திருக்கும் புர்கா என்ற உடை அணிந்து தான் வெளியே வர வேண்டும், அதோடு தனியாக வெளியே வரக்கூடாது என பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஹிஜாப் அணியாததன் மூலம் பெண்கள் விலங்குகளை போல் தோற்றமளிக்க முயல்வதாக ஆப்கானிஸ்தானின் கந்தகார் நகர் முழுவதும் தாலிபான்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

மேலும், ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்டறிந்து, அவர்களது குடும்பங்களுக்கு தகவல் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.