இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவி...சீன ஆதிக்கத்தை தடுக்கவா?

இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவி...சீன ஆதிக்கத்தை தடுக்கவா?

இந்திய அரசினால்  மேலும் 21,000 மெட்ரிக் டன் உரம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கான இந்தியாவின் சிறப்பு உதவியின் கீழான இந்த ரசாயன உரத்தை இந்திய உயர் ஆணையர் கோபால் பாக்லே,இலங்கையின் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் நேற்று கொழும்பு துறைமுகத்தில் ஒப்படைத்தார்.

கடந்த மாதம் இந்திய அரசினால் 44,000 மெட்ரிக் டன் உரம் வழங்கப்பட்டது.
அதற்கேற்ப இந்த ஆண்டில் இந்தியாவின் ஆதரவின் கீழ், இதுவரை 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உரம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஆணையரகம் தெரிவிக்கிறது.

 சமீபத்தில் சீன விண்வெளி ஆராய்ச்சிக் கப்பல் இலங்கை வந்தது. இது இந்திய அரசால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியா தற்போது இலங்கைக்கு வழங்கியிருக்கும் உதவி வேறு நாடுகளின் ஆதிக்கம் இலங்கையில் ஏற்படாமல் தடுக்கவே என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.