கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் பலி!

கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் பலி!

கனடா நாட்டின் ரெஜினா மாகாணம், ஜேம்ஸ் ஸ்மித் கிரீ நேசன் மற்றும் வடக்கு சஸ்காடூனில் உள்ள வெல்டன் கிராமத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த கத்திக்குத்து தாக்குதல்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மர்ம நபர்கள் தாக்குதல்

பல்வேறு இடங்களில் மர்ம நபர்கள் நடத்திய இந்த தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 15 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இரண்டு பேர் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ரெஜினா மாகாணத்தில் நடந்த சம்பவம் மிகவும் பயங்கரமானது என்றும். 13 இடங்களில் இந்த தாக்குதல் நடத்திருப்பதாகவும் அந்நகரத்தின்  துணை ஆணையர் பிளாக்மோர் தெரிவித்துள்ளார்.

தொடரும் குற்றச் சம்பவங்கள்

கனடாவின் வரலாற்றில் நிகழ்ந்த மிகவும் கொடூரமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. கடந்த 2020 ஆ  ம் ஆண்டு காவல்துறை அதிகாரி போல மாறுவேடமிட்ட நபர் நோவா ஸ்கோடியா மாகாணத்தின் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டும், தீ வைத்தும் எரித்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர்.