கல்லா பெட்டியை உடைத்து திருட்டு...அசோக் நகர் ஹாட்சிப்ஸ் கடையில்!!

கல்லா பெட்டியை உடைத்து திருட்டு...அசோக் நகர் ஹாட்சிப்ஸ் கடையில்!!

சென்னை, தனியார் உணவகத்தின் பூட்டை உடைத்து 3,750 ரூபாய் கொள்ளை, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, அசோக் நகர், நடேசன் சாலையில் ஹாட் சிப்ஸ் என்ற சைவ உணவகம் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.  இந்த உணவகத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.  இந்த உணவகம் காலை 6.00 மணியில் இருந்து இரவு 11.00 மணி வரை செயல்படுது வழக்கம்.  இந்த உணவகத்தின் மேலாளராக பணிபுரிந்து வரும் சுரேஷ் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு 11.00 மணி அளவில் உணவகத்தை மூடிவிட்டு சென்றுள்ளார் 

மீண்டும் நேற்று அதிகாலை 2.00 மணி அளவில்  உணவகத்தை திறக்க, வாட்ச்மேன் ஜிஜேந்திர சிங், பின் பக்கம் கதவை வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.  உடனடியாக உணவகத்தின் மேலாளர் சுரேஷ்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.  மேலாளர் சுரேஷ் வந்து பார்த்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பின்பக்கம் உள்ள கதவின் பூட்டை கட்டிங் பிளேயர் மற்றும் ஸ்க்ரூட்ரைவர் மூலம் உடைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் கடைக்கு உள்ளே சென்று பார்த்த போது உணவகத்தில் இருந்த கல்லா பெட்டியை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த 3,750 பணத்தை  திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது.  அதனை தொடர்ந்து உணவகத்தின் மேலாளர் சுரேஷ் அசோக்நகர் காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளார்.  அதன் அடைப்படையில் உணவகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு அசோக் நகர் போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட நபரை தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க:   மருத்துவரை தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்...காரணம் என்ன?!!