சாகும்வரை சிறை தண்டனை!மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் உத்தரவு!!

சாகும்வரை சிறை தண்டனை!மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் உத்தரவு!!

பாம்பன் மீனவ கிராமத்தில்  மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு  உள்ளாக்கிய குற்றவாளிக்கு  சாகும்வரை சிறை தண்டனை ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு  தீர்ப்பு வழங்கியது.

 ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்ன பாலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை கடந்த 2017 ஆம் ஆண்டு அத்துமீறி வீடு புகுந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய  கருப்பசாமி என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில்  மகளிர் நீதிமன்ற நீதிபதி ஏ. சுபத்திரா குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனையும் ரூ 13,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இதனை தொடர்ந்து குற்றவாளியை மதுரை சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.