துரத்தித் துரத்தி துப்பாக்கி முனையில் பிடிபட்ட இரண்டு திருடர்கள்...

சென்னையில் கடைகள் மற்றும் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்த பலே கில்லாடி இருவர் துப்பாக்கி முனையில் கைது செய்யபட்டுள்ளனர்.

துரத்தித் துரத்தி துப்பாக்கி முனையில் பிடிபட்ட இரண்டு திருடர்கள்...

சென்னை: வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளை குறிவைத்து இரவு நேரங்களில் கொள்ளையடிக்கப்பட்ட நபர்களை வேளச்சேரி காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்துள்ளது.

புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கைபற்றி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 21-வயதான சூர்யா என்ற குருவிசூர்யா, 20வயதான வினோத்குமார் என்ற எலிவினோத் ஆகிய இருவரை தனிப்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க | கொள்ளை அடித்து விட்டு, வீட்டை பூட்டி சென்ற மர்ம நபர்களுக்கு வலைவீச்சு...

கைது செய்யப்பட்ட இருவரை காவல் நிலையத்தில் வைத்து  விசாரித்ததில் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு இடங்கள் கொள்ளையடித்து வந்த இவர்கள் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கைதானா இருவரிடம் இருந்து 4 சவரண் தங்க நகைகள் மற்றும் ஏறாளமான செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அதிகப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | மனைவி கழுத்தை நெறித்து கொலை ... நாடகமாடிய கணவன் கைது ...