கணவன் மனைவி சண்டையில் பலியான இரண்டு பச்சிளம் குழந்தைகள்...

கணவன் மனைவி சண்டையில் பலியான இரண்டு பச்சிளம் குழந்தைகள்...

கடலூர் | சிதம்பரத்தை சேர்ந்த சற்குரு - தனலட்சுமி தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தனலட்சுமி தனது சகோதரியான தமிழரசி வீட்டிற்கு கைக்குழந்தையுடன் சென்றுள்ளார்.

தனலட்சுமியை சமாதானப்படுத்த தமிழரசி வீட்டிற்கு வந்த சற்குரு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தான் கொண்டு வந்த பெட்ரோலை தனலட்சுமி, அவரது 4 மாத குழந்தை, தனலட்சுமியின் சகோதரி தமிழரசி மற்றும் அவரது 8 மாத குழந்தை மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் குழந்தைகள் மற்றும் தமிழரசி உடல் கருகி உயிரிழந்த நிலையில், காயமடைந்த தனலட்சுமி மற்றும் சற்குரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க | மேட்ரிமோனியல் கொள்ளையன்.... சிக்கியது எப்படி?!!