புதர் மண்டிக்கிடக்கும் கால்நடை மருத்துவமனை...! செயல்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை...!

புதர் மண்டிக்கிடக்கும் கால்நடை மருத்துவமனை...! செயல்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை...!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அட்டுவம்பட்டி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது .விவசாயம் மேற்கொள்ளும் மக்கள் தங்களது விவசாய பணிகளுக்கு என வளர்ப்பு மாடுகள், ஆடுகள் உள்ளிட்டவைகளை வளர்த்து வருகின்றனர். மேலும் கடந்த சில வருடங்களாகவே இந்த மருத்துவமனை செயல்படாமல் உள்ளது. 

இதனால் கால் நடைகளுக்கு சிகிக்சை பெற முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்துள்ளதுள்ளனர். மேலும் கால் நடை மருத்துவமனை சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது . தொடர்ந்து மருத்துவமனை சுற்றி புதர்கள் மண்டி காணப்படுகிறது. எனவே இந்த கால் நடை மருத்துவமனையை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிக்க : மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்!