விடுப்புக்காக அடித்துக் கொண்ட பெண் காவலர்கள்.... சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்!!!

விடுப்புக்காக அடித்துக் கொண்ட பெண் காவலர்கள்.... சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்!!!

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில், பெண் காவலர்கள் இருவருக்குள் ஏற்பட்ட தகராறில், தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் மறவன் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆயுதப்படையில், உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வள்ளிச்செல்வி.  இவரிடம் தலைமை காவலரான சொர்ணவேனி தற்சார்பு விடுப்பு கேட்டுள்ளார்.   விடுப்பு தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  சிறிது நேரத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. 

இந்த நிலையில், உயர் அதிகாரிக்கு மரியாதை செலுத்தவில்லை எனக் கூறி, தலைமை காவலர் சொர்ணவேணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  ஆனால் சொர்ணவேனியோ, தனது சாதிப்பெயரை கூறி விடுப்பு தர முடியாது என வள்ளிச் செல்வி கூறியுள்ளார்.  இதனால் உண்மையில் நடந்தது என்ன என்பதை அறியும் விதமாக விசாரணை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   மகாராஷ்டிராவில் தொடரும் மோதல்.... சஞ்சய் ராவத் மீது வழக்குப்பதிவு!!!