திருவள்ளூர் இந்தியன் வங்கியில் தீ விபத்து!

திருவள்ளூர் இந்தியன் வங்கியில் தீ விபத்து!

திருவள்ளூர் உழவர் சந்தை அருகே இந்தியன்  வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 10 ஆயிரத்துக்கு மேல் பட்டா வாடிக்கையாளர்களும் 2500 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நகை கடன் அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை பிரபல வங்கியில் இருந்து கரும்புவை வங்கியிலிருந்து வெளியே வந்துள்ளது. வங்கி அருகே நடைபயணம் சென்ற பொதுமக்கள் வங்கியில் இருந்து வெளியேறும் புகையை கண்டு திருவள்ளூர் தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு துறை நிலை அலுவலர் இளங்கோ தலைமையில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுருந்த எரிந்து கொண்டிருந்த ஆவணங்களை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்தில்  ஒரு மேஜை மின்விசிறி, கணினி மற்றும் ஆவணங்கள் தீ விபத்தில் எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவம் குறித்து திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு உள்ளது எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.