MBBS மற்றும் BDS மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு...!
2023-2024 இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்காக காலந்தாய்வு 25 ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை இணையவழி மூலம் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
2023-2024 இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்காக காலந்தாய்வு 25 ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை இணையவழி மூலம் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு மையம் செப்டம்பர் மாதமே தொடங்கி விட்டதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி,
"நீட் தேர்வு பயிற்சி மையம் செப்டம்பர் மாதமே தொடங்கிவிட்டதாகவும் ஒரு புறம் சட்ட போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறோம் என்றும் கூறினார்.
மேலும், நீட் தேர்வை நிறுத்தும் வரை, ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களால் தனியார் நிறுவனங்களில் இரண்டு லட்சம் மூன்று லட்சம் கட்டி பயிற்சி மையங்களில் படிக்க முடியாது எனவும், குழந்தைகளை வளர்த்து எடுக்கக்கூடிய பொறுப்பு உள்ளது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசுகையில், “அரசு பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து வாங்குவது தப்பில்லை. எல்லோரிடத்திலும் வாங்கலாம். ஒவ்வொரு அரசாங்கத்திற்க்கும் தங்களுடை கருத்தை சொல்வதற்கு உரிமை உண்டு என்று நீதிமன்றமே சொல்லிவிட்டது", என அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க | "தினமும் ரெய்டு நடத்தட்டும்... Always Welcome" ஆர். எஸ் பாரதியின் Cool-ஆன பேச்சு!
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வர வேண்டும் என அந்நாட்டின் ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல் கூறியுள்ளார்.
பப்புவா நியூ கினியா நாட்டில் அரசு மட்டுமே கல்வி மற்றும் மருத்துவமனைகளை நடத்தி வருவதால் இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் அந்நாட்டிற்கு வந்தால் இங்கு உள்ளவர்களுக்கு தொழில் தொடங்க ஒரு வாய்ப்பாக அமையும் என அந்நாட்டின் ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல் தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கே.எஸ்.ஜி கல்லூரியில் இளைஞர்களின் வளர்ச்சி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்
பப்புவா நியூ கினியா நாட்டின் மேற்கு நியூ பிரிட்டனின் ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல், மற்றும் அந்நாட்டின் வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபு கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல் கூறியதாவது:-
பப்புவா நியூ கினியா நாட்டில் பல கல்லூரிகள் உள்ளது.ஆனால் அங்கு அரசாங்கத்தால் மட்டுமே நடத்தப்படும் கல்லூரிகள் உள்ளன.இந்தியாவில் போல் அங்கு இல்லை.இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளை அங்கு அழைத்து கொண்டிருக்கிறோம். அந்த நாட்டில் தொடங்க நிறைய வாய்ப்பு உள்ளது.இங்கு உள்ளவர்களுக்கு வியாபாரமாகவும் இருக்கும்.எங்கள் நாடு ஆஸ்திரியாவில் இருந்து விடுதலை பெற்ற நாடு.
இந்தியாவுக்கும் பப்புவா நாட்டிற்கும் 80லிருந்தே உறவுகள் உள்ளது.அங்கு கனிம வளம், விவசாயம் சம்மந்தபட்டதும் அதிகம் உள்ளது. சாட்டிலைட் தொடர்பாக இந்தியாவிலிருந்து பப்புவா நாட்டிற்கு வரும் 25,ஆம் தேதி இஸ்ரோ குழுவினர்கள் வருகிறார்கள்.
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து ஒரு வருடத்திற்கு 80ஆயிரம் மாணவர்கள் வெளியில் வருகிறார்கள்.10 ஆயிரம் பேர் தொழில் படிப்பு,பத்தாயிரம் பேர் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்.10 ஆயிரம் பேருக்கு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கிறது.இதனால் 50 ஆயிரம் மாணவர்கள் மேல் துறைக்கு போக முடியாமல் உள்ளனர்.
அங்கு தனியார் கல்வி நிறுவனங்கள் வந்தால் அவர்களுக்கு இதன் மூலம் வாய்ப்பு கொடுக்கலாம்.அங்குள்ள இந்தியர்கள் , நவராத்திரி கொண்டாடினர்.இந்தியர்கள் வெளி நாட்டில் ஒற்றுமையாக உள்ளனர்.வெளிநாடு தமிழர்கள் தங்களது கலாச்சாரத்தை மறக்கவில்லை என தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி அருகே நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் எரவார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி- கவிதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக பைரவி (வயது 18) என்ற பெண் பிள்ளை உள்ளது. பைரவி பெரிய சிறுவத்தூரில் உள்ள அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தார். பைரவி கடந்த வருடம் 12ஆம் வகுப்பில் 485 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.
அவர் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டதால் பைரவியின் பெற்றோர்கள் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் நீட் தேர்வு பயிற்சிக்காக சேர்த்துள்ளனர். தனக்கு சரியாக நீட் தேர்வு பயிற்சியில் படிக்க முடியவில்லை என தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பைரவி கூறியுள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் சம்பவத்தன்று வயலுக்கு அடிக்கக்கூடிய கலைக்கொல்லி மருந்து எடுத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் பைரவியின் தாயார் கவிதா அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி பைரவியின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க:செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?
பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு அறிவிப்பு: அரசாணை 149 ரத்து அறிவிப்பு வாக்குறுதி என்ன ஆனது? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினா எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் நியமிப்பதற்காக 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வள பயிற்றுனர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த நடவடிக்கை பட்டதாரி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகளுக்கு இரு வகையில் ஏமாற்றம் அளித்திருக்கிறது.
முதலாவதாக, அரசு பள்ளிகளில் 3587 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிக்கை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த திசம்பர் மாதமே ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்பின் 7 மாதங்கள் தாமதமாக அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், நிரப்பப்படவுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை 2,222 ஆக குறைந்து விட்டது.
அறிவிக்கை வெளியிட 7 மாதங்கள் தாமதமாகியுள்ள நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, காலியிடங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது வியப்பளிக்கிறது. அனைத்து காலியிடங்களையும் நிரப்பி அரசு பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும், அக்கறையும் அரசுக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது.
இரண்டாவதாக, 2018-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 149-இன்படி, பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் போட்டித் தேர்வின் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. அரசாணை எண் 149, அதனடிபடையிலான போட்டித் தேர்வு ஆகிய இரண்டும் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது கடந்த ஆட்சியில் திணிக்கப்பட்ட போட்டித் தேர்வை நடத்த துணிந்திருப்பதன் மூலம், தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு பெரும் துரோகம் செய்திருக்கிறது.
2012-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதன் தரவரிசை அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அப்போது போட்டித் தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை. ஆனால், 2018ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட 149 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் போட்டித் தேர்வை அப்போதைய அரசு திணித்தது.
அதற்கு பா.ம.க.வுடன் இணைந்து எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் போட்டித் தேர்வை ரத்து செய்வோம் என்று சூளுரைத்திருந்தார். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இது குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதை செயல்படுத்த வலியுறுத்தி, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், போட்டித் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று அரசு அறிவித்திருக்கிறது.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ஒட்டுமொத்த தமிழகமும் என்னென்ன காரணங்களுக்காக எதிர்க்கிறதோ, அந்தக் காரணங்கள் அனைத்தும் போட்டித் தேர்வுக்கு எதிராகவும் உள்ளன. ஒரு படிப்புக்கு 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு, நீட் தேர்வு என இரு தேர்வுகள் தேவையில்லை என்பது தான் நீட் தேர்வை எதிர்ப்பதற்காக தமிழக அரசு கூறும் காரணமாகும். அப்படியானால், ஒரே பணிக்கு தகுதித் தேர்வு, போட்டிதேர்வு என இரு தேர்வுகளை நடத்துவது மட்டும் எப்படி சரியாக இருக்கும்? எனவே, ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி அரசாணை 149 மற்றும் அதன்படியாக போட்டித் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு ஆணையிட வேண்டும்! ”,
என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்து ஆளுநருக்கு உண்மையிலேயே அக்கறை உள்ளதா?-பொன்முடி
கல்லூரிக்கு செல்லாவிட்டாலும் வருகையைப் பதிவு செய்து முதுநிலை பொறியியல் பட்டம் தரும் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து ஏமாற வேண்டாம் என்று அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,
"அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் B.voc Logistics Management மற்றும் B.Voc Footware manufacturing என்ற இரண்டு புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது ஆனால் மாணவர்களுக்கு இந்த படிப்பின் அருமை தெரியாமல் சேர்க்கை சரியாக நடைபெறவில்லை அதனால் ஐந்து மாணவர்கள் மட்டுமே தற்போது சேர்ந்துள்ளனர்.
இந்த இரண்டு படிப்புகளும் காஞ்சிபுரம் மற்றும் ஆரணியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட உள்ளன. அதன்படி இரண்டு படிப்புகளிலும் தலா 40 சீட்டு வீதம் உள்ளது. இதில் மாணவர்கள் சேர்ந்து படித்து பயன்பெற வேண்டும்", என தெரிவித்தார். அதன்படி, இந்த இரண்டு படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் 31 ஆம் தேதி. ஆனால் இந்த ஆண்டு பெரும்பாலான கல்லூரிகளில் அட்மிஷன் முடிந்த காரணத்தால் அது குறித்து தற்போது தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த இரண்டு படிப்புகளுக்கும் உலக அளவில் தேவை என்பது அதிகமாக உள்ளது. மேலும் அதனுடன் Sector skill council துணையுடன் இரு கோர்ஸ்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வேலை வாய்ப்பு பிரச்சனை இருக்காது. இந்த படிப்பை பொறுத்தவரை ஆறு செமஸ்டர்கள் என மூன்று ஆண்டு படிப்பாக உள்ளது. மேலும் இது பட்டப் படிப்பிற்கு இணையானது.
மற்றும் இந்தியாவில் 37 Sector skill council உள்ளது. அவர்கள் துணையுடன் செயல்படுவதால் தொழிற்சாலைகளில் படிக்கும் போதே பயிற்சி பெற முடியும் என்பதால் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது. மாணவர்கள் அதிக அளவில் தற்போது பொறியியல் படிப்புகள் படித்து வேலையில்லாமல் குறைந்த ஊதியத்திலும் பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால் இது போல திறன் மேம்பாட்டு படிப்புகளில் சேர்ந்து படிக்கும் போது, அவர்களுக்கு முறையான வேலையும் ஊதியமும் கிடைக்கிறது.
அதனால் வருங்காலத்தில் தமிழ்நாட்டில் பொறியியல் சீட்டுகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டு இதுபோல மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பு கொண்ட திறன் மேம்பாட்டு படிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளோம்”, என தெரிவித்தார்.
அதனுடன், தற்போது முதுநிலை பொறியியல் படிப்பான எம்.இ படிக்கும் மாணவர்கள் சட்டவிரோதமாக சில தரம் குறைவான கல்லூரிகளில் சேர்ந்து கல்லூரிக்கு வராமல் பட்டங்களை பெறுகின்றனர். அவ்வாறு பெறப்படும் பட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அந்தப் பட்டங்கள் செல்லாது மற்றும் அவர்கள் படித்த கல்லூரியின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்றும் இது மாதிரியான நிகழ்வுகள் கோயம்புத்தூர் தொடங்கி கேரள எல்லை பகுதிகளில் அதிகமாக நடைபெறுகிறது எனவும் தெரிவித்தார்.
கேரளாவில் இருக்கும் மாணவர்கள் அவர்கள் மாநிலத்தில் பணிபுரிகின்றனர். ஆனால் தமிழக பகுதிகளில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் அவர்களுக்கு அட்மிஷன் இருக்கிறது. அவர்கள் இந்த கல்லூரியில் படிப்பது போல போலியான அட்டனன்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் செமஸ்டர்கள் முடிந்தவுடன் பட்டமும் வழங்கப்படுகிறது. இது எம்.இ. படிக்க மிக எளிமையான வழிமுறையாக இருந்தாலும் இது சட்ட விரோதமானது. எனவே, இப்படிப்பட்ட கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆனால் ஏ.ஐ.சி.டி அமைப்பு இதுபோல பணியில் இருந்து கொண்டே படிக்க விரும்பும் மாணவர்களுக்கு புதிய கல்வி முறையை தற்போது அங்கீகரித்துள்ளது. ஆனால்,தமிழக அரசு இன்னும் அந்த முறைக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனால் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உயர்கல்விக்கான சேர்க்கைக்கு இந்த மாத இறுதி, கடைசி நாளாக இருப்பதால் அரசு உடனடியாக இந்த கல்வி முறைக்கு அங்கீகாரம் கொடுத்து மாணவர்கள் சேர்க்கைக்கு வழி செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
இதையும் படிக்க | "எந்த காலத்திலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது" சீமான் உறுதி!