தெலுங்கு ரசிகர்களுக்கு இன்னொரு பக்கத்தை காட்டிவிட்டேன் - நடிகை பிரியாமணி ஓபன் டாக்

தெலுங்கு ஆடியன்ஸுக்கு என்னோட இன்னொரு பக்கத்தையும் நாரப்பா படத்தின் மூலம் காண்பிக்க முடிந்துள்ளது என நடிகை பிரியாமணி பேட்டி அளித்துள்ளார்.

தெலுங்கு ரசிகர்களுக்கு இன்னொரு பக்கத்தை காட்டிவிட்டேன் - நடிகை பிரியாமணி ஓபன் டாக்

அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ’நரப்பா’ திரைப்படம் ஓடிடியில் வெளியானது. தெலுங்கில் ஸ்ரீகாந்த் அடலா இயக்கத்தில் வெங்கடேஷ் - பிரியாமணி நடித்திருந்தனர். தமிழில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு மனைவியாக தோன்றிய மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தில் தெலுங்கில் பிரியாமணி நடித்துள்ளார்.

பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகாக மனம் கவர்ந்த பிரியாமணி மீண்டும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நாரப்பா பட அனுபவம் குறித்து பிரியாமணி அளித்த பேட்டியில் பேசியதாவது: 

அசுரன் படத்தை தெலுங்கில் நான் நடிக்க போறேன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.  தெலுங்குல நிறைய கிளாமர் ரோல்களே பண்ணதால இந்த கேரக்டர், என்னோட தெலுங்கு ரசிகர்களுக்கு ரொம்பவே புதுசா இருக்கும். ஆனா, தமிழ்ல அப்படி இல்ல.

பருத்திவீரன் படத்திலேயே முத்தழகு கேரக்டர்ல கிராமத்துப் பொண்ணா நடிச்சிருந்தேன். கிளாமர் கேரக்டர்கள்லேயே பெரும்பாலும் என்னைப் பார்த்துவந்த தெலுங்கு ஆடியன்ஸுக்கு என்னோட இன்னொரு பக்கத்தையும் நாரப்பா மூலம் காட்ட முடிஞ்சிருக்கு என்று பேசியுள்ளார்.