அமுதம் அங்காடிகளில் பருப்பு, தக்காளி விற்பனை..!

அமுதம் அங்காடிகளில் பருப்பு, தக்காளி விற்பனை..!

சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகளில் வெள்ளிக்கிழமை முதல், பருப்பு வகைகள் மற்றும் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன்படி விலை உயர்வை கட்டுப்படுத்த கொள்முதல் விலைக்கே விற்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், துவரம் பருப்பு 500 கிராம் 75 ரூபாய்க்கும், உளுத்தம் பருப்பு 500 கிராம்  60 ரூபாயாகவும் விற்பனை செய்ய திட்டமிடப்படுள்ளது.

பொது மக்களின் நலன் கருதி உணவுத்துறை சார்பில் கொள்முதல் விலைக்கு நாளை முதல் விற்பனை செய்ய நடவடிக்கை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் நாளை முதல் விற்பனை தொடங்குகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த உணவுத்துறை சார்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

இதையும் படிக்க   | கொடைக்கானல்: மலை காய்கறிகள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி..!