அசாம்: இடுப்பளவு வெள்ளத்தில் குழந்தையை சுமந்து சென்ற தந்தை!!

அசாம் மாநிலம் சில்ச்சாரில் இடுப்பளவு வெள்ளத்தில் ஒருவர், தனது குழந்தையை தூக்கி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

அசாம்: இடுப்பளவு வெள்ளத்தில் குழந்தையை சுமந்து சென்ற தந்தை!!

அசாமில் ஏற்படுள்ள வெள்ளப்பெருக்கால் சுமார் 47 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சில்ச்சார் பகுதியில் இடுப்பளவு சூழ்ந்துள்ள வெள்ளத்தில், ஒருவர் தனது குழந்தையை சுமந்தபடி சாலையைக் கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலிலும் அவர் சிரித்தபடி சாலையை கடந்து செல்வது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் வாசுதேவர் குழந்தை கிருஷ்ணரை சுமந்துகொண்டு யமுனை நதியை கடந்ததுபோல், அவர் தனது குழந்தையுடன் கடந்து செல்வதாக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.